தேவனிடத்தில் நாம் கொண்டிருக்கும் அன்பு ஒருக்காலும் பிரிக்க முடியாததாக இருக்க வேண்டும்
கர்த்தரை தேடி அதிகமாக அவரைப்பற்றி அறிந்து கொள்ளுவதிலேயே மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கிறது.
*“உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது”*
(உன்னதப்பாட்டு 4:10).
ஆம், கர்த்தருடைய நேசம் அது மிக இனிமையானது
திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும். – உன்னதப்பாட்டு 8:7
நாம் தேவனிடத்தில் கொண்டிருக்கும் அன்பினை ஒருக்காலும் பிரிக்க முடியாததாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். – ரோமர் 8:36-39
Comments
Post a Comment