கர்த்தர் விரும்பும் நாவு
🛑பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம். 🛑 கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும். 🛑அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது! 🛑நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தையே கொளுத்திவிடுகிறதாயும் இருக்கிறது! யாக்கோபு 3:5-6 கர்த்தர் மனுஷர்களுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கிறார் அவற்றில் மிக முக்கியமானது நாவாகும் மனிதனின் அன்றாட செயல்களில் அவனை முன்னேற்றுவதும் தவறான பாதைகளின் பக்கம் அழைத்து செல்வதிலும் முதன்மையாக இருப்பது அவனுடைய நாவு தான்.அது சிறியதொரு சதைத் துண்டுதான், என்றாலும் அதனால் விளையும...