Posts

Showing posts from November, 2024

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை

Image
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் (கலா.5:24). “நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்” என்கிற பவுல், ஆவியின் கனியைக் குறித்து பேசுகிறார். நாம் ஆவிக்கேற்றபடி நடக்கிறவர்களானால் நம்மில் இந்த ஆவியின் கனி காணப்பட வேண்டும். நம்மில் உள்ள கனியைக் கண்டு நாம் எப்படிப்பட்டவர்கள் என்று பிறர் அறிந்துகொள்வார்கள். நாம் யார் என்று சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை. ஆவியின் கனியின் எல்லா பகுதிகளுமே முக்கியமானவை. அவற்றை நாம் தனித்தனியே பிரிக்கமுடியாது. சிலர் என்னில் ஆவியின் இரண்டு கனி உண்டு, நான்கு கனியுண்டு என்பர். அப்படியல்ல; அதின் ஒன்பது பகுதிகளுமே நம்மில் முழுமையாகக் காணப்படவேண்டியது அவசியம். கர்த்தருக்கு பிரியாமனவர்களே, நமது வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? ஆவியின் வரங்களுக்கா? ஆவியின் கனிக்கா? நாம் தேவனுடைய பிள்ளைகளானால், நம்மில் ஆவியின் கனி காணப்படவேண்டியது அவசியம். ஆவியின் வரங்களோ தேவைக்கேற்றபடி அவனவனுக்கு ஆவியானவரால் அருளப்படுவது. அதேசமயம் ஆவியின் கனியை நம்மால் நம்மில் உருவாக்க முடியாது. அது...

ஆவியின் வரங்கள் & ஆவியின் கனிகள்

  II இராஜாக்கள் 2:9 அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான். இங்கே எலியா செய்த அற்புதங்கள்/அடையாளங்கள் மற்றும் ஆவியானவர் பேசி வழிநடத்துதல் என்னும் விசேஷமான தேவனுடைய சக்தியை "ஆவியின் வரம்" என்று எலிசா குறிப்பிடுகிறான். இங்குதான் முதலாவதாக ஆவியின் வரம் குறித்து சொல்லப்பட்டுள்ளது. [A] "ஆவியின் வரங்கள்" என்பதற்கு கிரேக்க மொழியில் χαρίσματα (Charismata =  gift ) என்று அழைக்கப்படுகின்றது. 1 கொரி 12:4. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே. [B] ஆனால் வரம் என்று வாசிக்கும்போது கிரேக்க மொழியில் δωρεά ( dōrea =bestowal, bestowment, donation)  என்று சொல்லப்படுகின்றது. (அப் 2:38 38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். தமிழில் ஒருமை, பன்மையில் கூறப்பட்டுள்ளது. பவுல் கிரேக்க மொழியில்தான் இந்த நிருபங்களை எழுதினார் என்பதை நினைவில் கொள்ளவ...

ஞானத்தைக் காட்டிலும் பெரியது

Image
“அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்” (2 சாமுவேல் 17 வசனம் 14). தாவீதைக் கொல்வதற்கான அகித்தோப்பேலின் ஆலோசனை சிறந்ததுதான் என்பதை அப்சலோம் அறிந்திருந்தான். ஆயினும் தன்னைச் சேவிக்கும்படி வந்திருக்கிற ஊசாயின் ஆலோசனையையும் கேட்போம் என்னும் அப்சலோமின் முடிவு அகித்தோப்பேலின் ஒட்டுமொத்த திட்டத்தையும் மாற்றிப்போட்டது. ஊசாய் அப்சலோமின் பெருமைக்கு தீனிபோடும் விதமாக, படையை அகித்தோப்பேல் அல்ல, நீர்தான் நடத்த வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்தான். பெருமை கொண்ட எவரும் வெற்றியையும் அதனால் வரும் புகழையும் வேண்டாமென்று எளிதாகத் தள்ளிவிட மாட்டார்கள். அழிவுக்கு முன்னதாக வரும் பெருமை என்னும் ஆற்றில் அப்சலோம் விழுந்தான். முடிவில் அது அவனை மரணத்துக்கு நேராக இழுத்துச் சென்றது. அகித்தோப்பேலின் ஆலோசனையைக் கேட்ட பிறகு அப்சலோம் ஊசாயின் ஆலோசனையை ஏன் கேட்க வேண்டும்? இங்கேதான் தாவீதின் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக கர்த்தரின் கரம் செயல்படுகிறதைக் காண்கிறோம். தாவீதும் அவனுடைய மனிதரும் சோர்ந்துபோயிருக்கிறார்கள், எனவ...

கர்த்தருடைய வழி

Image
  “கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?” (எரேமியா 23:18). இப்போது நம்முடைய பிரச்சனை என்ன என்பது விளங்குகிறதா? கர்த்தருடைய வழி என் வழியாயிருக்கவேண்டும் என்பதை சற்றேனும் நினையாமல், என் வழி கர்த்தருடைய வழி என்பதுபோல நாம் வாழுகிறோம். கர்த்தருடைய நினைவின்படி அல்ல; என் நினைவின்படி கர்த்தர் செயற்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது ஜெபங்களும் அதே பிரகாரம்தான் இருக்கிறது. நமது பிரச்சனைகளையும் முறையிட்டு, அதிலிருந்து தப்பிக்கொள்ளக்கூடிய வழியையும் கர்த்தருக்கு நாமே கற்பித்து, அதன்படி நடக்க கர்த்தரையே அழைக்கின்ற அளவுக்கு நாமேதான் கதாநாயகர்களாகிவிட எண்ணுகிறோம் என்பது தான் உண்மை. நான் கேட்டேன், கர்த்தர் செய்தார் என்பது தான் அநேகருடைய சாட்சியாகவும் இருக்கிறது. ஆம், உண்மைதான், கர்த்தர் தமது பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்பார், நாம் கேட்டபடியும் செய்வார். அது அவருடைய சுத்த கிருபை. மாறாக, நாம் சொல்ல அவர் கேட்க, அவர் நமது வேலையாள் அல்ல. அவர் கர்த்தர். அவர் ராஜரீகம் செய்கிறவர். அவரது வழிகள் உயர்ந்தவைகள். அவர்...